-->
TNPSC Portal
Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 10


  1. பொருத்தக
    (1) கார்காலம் (a) ஆனி, ஆடி
    (2) குளிர்காலம் (b) மாசி, பங்குனி
    (3) முன்பனிக் காலம் (c) ஐப்பசி, கார்த்திகை
    (4) பின்பனிக் காலம் (d) ஆவணி, புரட்டாசி
    (5) இளவேனிற்காலம் (e) சித்திரை, வைகாசி
    (6) முதுவேனிற் காலம் (f) மார்கழி, தை
    1. a b c d e f
    2. b c d e f a
    3. a f e d c b
    4. d c f b e a

  2. ”அயோத்திய தாசர்” பற்றிய கூற்றுகளை ஆராய்க
    (1) அயோத்திய தாசர் இந்து மத கருத்துகளை ஆழ்ந்து கற்றவர், புத்த நெறியால் கவரப்பெற்றார்.
    (2) நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் இனப்பிரிவில் கலப்பு திருமணம் செய்து கொண்டு பத்து ஆண்டுகள் இரங்கூன் சென்று வாழ்ந்தார்.
    (3) சித்த மருத்துவத்தில் கை தேர்ந்ததால் ”மருத்துவர்” என்றும் ”பண்டிதர்” என்றும் அழைக்கப் பெற்றார்.
    (4) தமது மருத்துவ ஆராய்ச்சியின் படி எள் செடியின் விதையிலிருந்து நெய் கண்டுபிடித்த திரு நாளே தீபாவளி என்று புதியதோர் விளக்கம் தந்தார்.
    (5) வீரமா முனிவரைப்போல் எழுத்து சீர்திருத்தம் செய்துள்ளார். இவர் திருவாசகத்திற்கும் உரை எழுதியுள்ளார்
    1. 2,3,4,5 சரி 1 தவறு
    2. அனைத்தும் சரி
    3. 1,2,3,4 சரி 5 தவறு
    4. 1,2,3 சரி 4,5 தவறு

  3. தீபாவளியை ”நுகர்பொருள் கண்டு பிடிப்புத் திருநாளாக கொண்டாடுபவர்கள் யார்?
    1. ஜப்பானியர்கள்
    2. ஜெர்மனியர்கள்
    3. சிங்கப்பூர் மக்கள்
    4. மலேசியர்கள்

  4. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. கோதில் மொழிக் கொற்றவனார் யார் ? - திருநாவுக்கரசர்
    2. குறட்டை ஒலி சிறுகதை எழுதியவர் - மு.வரதராசனார்
    3. வள்ளல் சீதக்காதி என அழைக்கப்பட்டவர் - கடிகை முத்துபிள்ளை
    4. காந்தியடிகள் தன் தைத்த செருப்பை யாருக்கு அன்பளிப்பாக வழங்கினார் - ஸ்மட்ஸ்

  5. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று, எல்லா அடிகளும் நாற்சீர் அடிகளாய் வருவது
    1. இணைக்குறள் ஆசிரியப்பா
    2. நிலைமண்டில ஆசிரியப்பா
    3. நேரிசை ஆசிரியப்பா
    4. அடிமறிமண்டில் ஆசிரியப்பா

  6. ”உலகு” என்னும் சொல் வெண்பாவில் ஈற்றடியின் ஈற்று சீராயின் வாய்ப்பாடு
    1. பிறப்பு
    2. மலர்
    3. காசு
    4. நாள்

  7. ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் எதில் முடிவது சிறப்பு
    1. ஐ காரத்தில்
    2. ஓ காரத்தில்
    3. ஏகாரத்தில்
    4. ஆ காரத்தில்

  8. ”தேன் மொழி” இலக்கண குறிப்பு தருக
    1. உவமைத் தொகை
    2. எண்ணும்மை
    3. உருவகம்
    4. வினைத்தொகை

  9. கீழ்கண்டவற்றில் பொருத்தாதவை
    1. மாதிரம்
    2. பூதரம்
    3. கிரி
    4. தத்தை

  10. கீழ்கண்டவற்றில் தவறாக பொருத்தப்பட்டது.
    1. ஆகாயத்தாமரை - இல்லாத ஒன்று
    2. அவலை நினைத்து உரலை இடித்தல்- எண்ணமும் செயலும் ஒன்றாக ஒத்துவருதல்
    3. கானல் நீர் - இருப்பது போல் தோன்றும் ஆனால் இராது
    4. அவசரக் குடுக்கை - எண்ணித் துணியாதார்



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.