Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

”இ-ருபி” (e-RUPI) என்ற டிஜிட்டல் கட்டண தீர்வு முறை ( digital payment solution )

 ”இ-ருபி” (e-RUPI) என்ற  டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை ( digital payment solution ) பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 2-8-2021 அன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இ-ருபி என்பது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான ரொக்கமில்லா மற்றும் தொடர்பில்லா சாதனம். இது  க்யூஆர் குறியீடு (QR code) அல்லது எஸ்எம்எஸ் ( SMS) அடிப்படையிலான மின்னணு -சான்று (e-Voucher) ஆகும். இது பயனாளிகளின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.   இந்த தடையற்ற, ஒரே முறை பணம் செலுத்தும் பொறிமுறையை பயன்படுத்துபவர்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இல்லாமல், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் செயலி இல்லாமல் அல்லது நெட் பேங்கிங் முறையை பயன்படுத்தாமல், மின்னணு சான்று மூலம் சேவை அளிப்பவரிடம் பணம் செலுத்த முடியும்.  இதை யுபிஐ தளத்தில், நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (National Payments Corporation of India) , நிதி சேவைகள் துறை(Department of Financial Services) , மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.