Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தமிழகத்தின் 17வது புதிய சரணாலயம் - “காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம்”

தமிழகத்தின் 17வது  புதிய சரணாலயமாக கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள “காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம்”   வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972, பிரிவு 26A-ன் கீழ் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 686.405 சதுர கி.மீ பரப்பிலான காப்புக்காடுகளை  கொண்ட இச்சரணாலயமானது தமிழ்நாட்டின் காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் பெரியதொரு பாதுகாப்புப் பகுதியாக அமைகிறது.

கூ.தக. :  கடந்த ஓராண்டில், தமிழகத்தில்,  கழுவேலி பறவைகள் சரணாலயம் (விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள்), நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் (திருப்பூர் மாவட்டம்), கடவூர் தேவாங்கு சரணாலயம் (கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்) மற்றும் கடற்பசு பாதுகாப்பகம் (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) போன்றவற்றை வன உயிரின பாதுகாப்புச் சட்டம், 1972 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.