தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தொடங்கப்பட்ட தினம் - 20 நவம்பர், 1916
நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளே, சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கூ.தக. : நவம்பர் 20,1916 அன்று சென்னை வேப்பேரியில் வழக்கறிஞர் டி.எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் பிராமணர் அல்லாத தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் அமைப்புக் கூட்டம் ஒன்று கூடியது. திவான் பகதூர் பிட்டி. தியாகராய செட்டியார், டாக்டர் டி. எம். நாயர், திவான் பகதூர் பி. ராஜரத்தின முதலியார், டாக்டர் சி. நடேச முதலியார், திவான் பஹதூர் பி. எம். சிவஞான முதலியார், திவான் பகதூர் பி. ராமராய நிங்கார், திவான் பகதூர் எம். ஜி. ஆரோக்கியசாமிப் பிள்ளை, திவான் பகதூர் ஜி. நாராயணசாமி ரெட்டி, ராவ் பகதூர் ஓ. தணிகாசலம் செட்டியார், ராவ் பகதூர் எம். சி. ராஜா, டாக்டர் முகமது உஸ்மான் சாகிப், ஜே. எம். நல்லுசாமிப்பிள்ளை, ராவ் பகதூர் கே. வேங்கட்டரெட்டி நாயுடு (கே. வி. ரெட்டி நாயுடு), ராவ் பகதூர் ஏ. பி. பாத்ரோ, டி. எத்திராஜுலு முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார், ஜே. என். ராமநாதன், கான் பகதூர் ஏ. கே. ஜி. அகமது தம்பி மரைக்காயர், அலர்மேலு மங்கைத் தாயாரம்மாள், ஏ. ராமசாமி முதலியார், திவான் பகதூர் கருணாகர மேனன், டி. வரதராஜுலு நாயுடு, எல். கே. துளசிராம், கே. அப்பாராவ் நாயுடுகாரு, எஸ். முத்தையா முதலியார், மூப்பில் நாயர் உள்ளிட்ட தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள். அக்கூட்டத்தில் தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உருவானது.
தகவல் ஆதாரம் : https://ta.wikipedia.org/wiki/நீதிக்_கட்சி#நீதிக்கட்சியின்_தோற்றம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.