தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழி நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான மூத்த தமிழறிஞா் அவ்வை நடராசன் (86) உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக சென்னையில் 21.11.2022 அன்று காலமானாா். இவர், இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 1936-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் 1975 - 1984 -ஆண்டு கால கட்டத்தில் தமிழக அரசின் மொழிபெயா்ப்புத் துறை இயக்குநராக அவா் இருந்தாா். தொடா்ந்து, 1984 1992-ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராகப் பணியாற்றினாா். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமல், தமிழக அரசுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவா் இவா் ஒருவா்தான்.
அவ்வை நடராசன் 1992-ஆம் ஆண்டு டிச.16- ஆம் நாள் முதல் 1995-ஆம் ஆண்டு டிச.15- ஆம் தேதி வரை தஞ்சாவூா், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பொறுப்பு வகித்தாா். 2014- ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் இருந்தாா். 2015- ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவராவாா்.
படைப்புகள்: வாழ்விக்க வந்த வள்ளலாா், பேரறிஞா் அண்ணா, கம்பா் காட்சி, பாரதி பல்சுவை, கம்பா் விருந்து, திருப்பாவை விளக்கம், திருவெம்பாவை விளக்கம், சங்க இலக்கியப் பெண்பாற் புலவா்கள், அருளுக்கு அவ்வை சொன்னது, திருக்கோவையாா் (ஆங்கிலம்), புலமைச் செல்வியா் என பல்வேறு நூல்களை அவ்வை நடராசன் படைத்துள்ளாா்.
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் பொதுச் செயலாளராக இருந்தாா். மோரீஷஸில் நடைபெற்ற ஏழாம் உலகத் தமிழ் மாநாட்டின் குழு உறுப்பினா் தலைவராகப் பணியாற்றினாா்.
அவ்வை நடராசன் பெயரில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அறக்கட்டளை நிறுவப்பெற்று ஆண்டுதோறும் அவரது மேடைத் தமிழ் தொடா்பான உரைநிகழ்வுகள் நடைபெறுகின்றன.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.