Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தனுஷ்கோடியில் அமையும் இந்தியாவின் முதல் கடல் காற்றாலை

 இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல் முறையாக கடல் காற்றாலை கொண் டுவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனுஷ்கோடியில் 350 கோடி ரூபாயில் கடல் காற்றாலை ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்திற்கு, 75 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கட வில் தலா, 8 மெகா வாட் திறனில் இரு காற்றாலைகளை நிறுவி, பரிசோதிக்க சென்னையில் உள்ள மத்திய காற்றாலை நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கூ.தக. : இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின் சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறி விப்பு ஒன்றை வெளியிட் டது. அதன்படி, ஒன்றிய எரிசக்தித் துறை சார்பில் இந்தியாவில் 7.600 கிலோ மீட்டர் நீள கடற்கரை பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழகத்தில் மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடல் பகுதியில் மணிக்கு 29 கி.மீ. வேகத்திலும், குஜ ராத் மாநிலத்தில் உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் மணிக்கு 24.5 கி.மீ. வேகத்தி லும் காற்று வீசுவது தெரிய வந்தது. இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தது. இந்த திட்ட அறிக்கையின் படி தமிழகத்தில் கடல் காற்றாலை கள் மூலம் மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.