’காசி- தமிழ் சங்கமம்’ ( ‘Kashi Tamil Sangamam’) நிகழ்ச்சிகள் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசியில் 17 நவம்பா் 2022-ஆம் தேதி முதல் 16 டிசம்பா் 2022 வரையில் நடைபெறுகின்றன. காசிக்கும் தமிழகத்திற்குமிடையே உள்ள பழமையான தொடா்பை மீண்டும் கண்டறிந்து, உறுத்திப்படுத்திக் கொண்டாடும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த நிகழ்வை பிரதமர் மோடி அவர்கள் 19.11.2022 அன்று வாராணசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் முறைப்படி தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்வின் போது, திருக்குறள் 13 மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமைகளாகும்.
கூ.தக. : ‘‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற சிந்தனையை மேம்படுத்துவது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் அரசு முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். இந்த நோக்கத்தை பிரதிபலிக்கும் மற்றொரு முயற்சியாக, காசியில் (வாரணாசி) ஒரு மாத கால நிகழ்ச்சியான ‘காசி தமிழ் சங்கமம்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப் பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து உறுதிப்படுத்துவதும், இந்த திட்டத்தின் நோக்கமாகும். இரு பிராந்தியங்களில் இருந்தும் அறிஞர்கள், மாணவர்கள், தத்துவ ஞானிகள், வணிகர்கள், கைவினைஞர்கள், கலைஞர்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, அவர்களின் அறிவு, கலாச்சாரம், அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.