Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

அடையாளப்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (Scheme for Economic Empowerment of DNTs (SEED))

அடையாளப்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத்  திட்டம் (Scheme for Economic Empowerment of DNTs (SEED)) 16.2.2022 அன்று  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார்  அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

அடையாளப்படுத்தப்பட்ட பழங்குடியின  மக்களின் பொருளாதார மேம்பாட்டு திட்டம் 4 முக்கிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்டது .

1. கல்வி மேம்பாடு - இப்பிரிவு மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மற்றும் தொழில் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத இலவசப்  பயிற்சி. 

2. பிரதமரின் மக்கள் ஆரோக்கியத்  திட்டம் மூலம் சுகாதார காப்பீடு.

3. வருமானத்துக்கு வாழ்வாதார உதவிகள்

4. பிரதமரின் வீட்டு வசதித்  திட்டம் மூலம் வீடுகள்.

இத்திட்டம் மூலம் 2021-22ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு ரூ.200 கோடி செலவிடப்படும்.

கூ.தக. :மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் 2014, ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் சீர்மரபினர் மற்றும் நாடோடிகளுக்கான தேசிய ஆணையத்தை  மூன்றாண்டு காலத்திற்கு அமைத்தது. இந்த தேசிய ஆணையம் திரு பிக்கு ராம்ஜி ஐடேட் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்தது.  இந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய சமூகநீதி அமைச்சகம் இந்த சமுதாயத்தினருக்கான மேம்பாடு மற்றும் நலவாரியத்தை 2019-ல் அமைத்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.