Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

“ஸ்வச்ச உத்யமி யோஜனா” (Swachhta Udyami Yojana)

  தேசிய துப்புரவு தொழிலாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (National Safai Karamcharis Finance and Development Corporation (NSKFDC)) எனும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்  கீழ் செயல்படும் அமைப்பினால்  2.10.2014 அன்று “ஸ்வச்ச உத்யமி யோஜனா” (Swachhta Udyami Yojana) தொடங்கப்பட்டது.  2 அக்டோபர் 2014 அன்று பிரதமரால் தொடங்கப்பட்ட ‘ஸ்வச் பாரத் அபியான்’ நோக்கங்களை நனவாக்கும் முயற்சிகளை ஒருங்கிணைத்து, குப்பைகளை சேகரிக்க, சுகாதாரம் தொடர்பான வாகனங்கள், சாத்தியமான சமுதாய கழிப்பறை திட்டங்களுக்கு சலுகைக் கடன் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  இத்திட்டத்தின் கீழ், சஃபாய் கர்மாச்சாரிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட கையால் மலம் அள்ளுபவர்கள் (identified manual scavengers) மத்தியில் உள்ள தொழில்முனைவோர், ஆண்டுக்கு 4% சலுகை வட்டியில் வரையறுக்கப்பட்ட உச்சவரம்பு வரை கடனைப் பெறலாம். பெண் பயனாளிகளுக்கு, வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தில் 1% தள்ளுபடி வழங்கப்படும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.