தேசிய கல்விக் கொள்கை 2020 க்கு இணங்க 2022-27 ஆம் நிதியாண்டில் செயல்படுத்த அனைவருக்கும் கல்வி (முன்னர் வயது வந்தோர் கல்வி என்று அழைக்கப்பட்டது) திட்டம் (யு.எல்.எல்.ஏ.எஸ்- நவ பாரத் சாக்ஷர்தா காரியக்ரம் (ULLAS- Nav Bharat Saaksharta Karyakram) (Education for All)) குறித்த விழிப்புணர்வை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, 8 செப்டம்பர் 2023 அன்று சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு 2023 செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 8வரை தேசிய எழுத்தறிவு வாரம் (National Literacy Week) நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
யு.எல்.எல்.ஏ.எஸ்- நவ பாரத் சாக்ஷர்தா காரியக்ரம் (ULLAS- Nav Bharat Saaksharta Karyakram) திட்டம் பற்றி :
மத்திய நிதியுதவி திட்டமான உல்லாஸ் - நவ பாரத் சாக்ஷர்தா காரியக்ரம் / அனைவருக்கும் கல்வி திட்டம்(முன்னர் வயது வந்தோர் கல்வி என்று அழைக்கப்பட்டது) மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இத்திட்டம் (i) அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, (ii) விமர்சன வாழ்க்கைத் திறன்கள், (iii) அடிப்படைக் கல்வி, (iv) தொழிற்திறன்கள், (v) தொடர்ச்சியான கல்வி ஆகிய ஐந்து கூறுகளைக் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.